April 29, 2026
maxresdefault
Share

ஐரோப்பிய-அமெரிக்க வணிக அரசியல் நிலைநிறுத்தமும் – வேத நூல்கள் எதிலும் இல்லாத கிறிஸ்மஸ் தாத்தாவுக்கும் என்ன தொடர்பு? யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா? எப்படி உலகம் முழுமையும் இவர் அறியப்படுகிறார்?

கி.பி.4 ம் நூற்றாண்டில் துருக்கியின் சிமிர்னாவில் பேராயராக இருந்தவர் நிக்கோலஸ்.இவர் மிகப் பெரிய செல்வந்தர். ஏழைகளுக்கு உதவுபவர். குழந்தைகளிடம் இனிமையாகப் பழகுபவர். இவரின் எளிய நடவடிக்கை பலரையும் இவர்பால் ஈர்க்கச் செய்தது. கத்தோலிக்கம் இவரைப் புனிதராக திருநிலைப்படுத்தியது. இவரை மையமாக வைத்து 1822 ல் டாக்டர் கிளமெண்ட் மூர் எனும் கவிஞர் “ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்” எனத் தொடங்கும் கவிதை ஒன்றை எழுதுகிறார்.

இக்கவிதையின் நாயகன் நிக்கோலஸ். ஆனால் அக்கவிதையில் நிக்கோலஸை ‘சாண்டா கிளாஸ்’ எனும் புனைவுப் பெயரில் அழைக்கிறார். இக்கவிதையில் வரும் பாத்திரங்களுக்கு ஒரு அமெரிக்க ஓவியர் வரைந்த ஓவியத்திலேயே “அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பனிச்சறுக்கு வண்டி ஒன்றை, ஒன்பது கலைமான்கள் இழுத்துச் செல்வதும்,
அதில் கம்பீரமாக சாண்டா கிளாஸ் எனும் ‘நத்தார் தாத்தா’அமர்ந்து செல்வதையும் காண முடிந்தது” அந்த மான்கள் ஒவ்வொரு வீட்டின் கூரைகள் மீதும் பறந்து செல்லும்போது, புகை கூண்டின் வழியே தாத்தா குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

அழகிய சிவந்த கன்னங்கள்,பழுப்பு நிறத்தாடி,சிறிய வாய்,பெருத்த தொப்பை, சிவப்பு நிற மேலாடை,பனிக்காலத் தொப்பி, தோளில் ஒரு மூட்டை ஆகியவை இணைந்த உருவமே ‘சாண்டா கிளாஸ்’  இந்த உருவத்தை தனது வீட்டு தோட்டக்காரரின் உருவத்தை கொண்டு கவிதை எழுதியதாக ‘கிளமெண்ட் மூர்’ சொன்னாலும் அதன் பின்னணி வேறு.

’தோர்’ எனும் ஜெர்மானியக் கடவுளை கொம்புகளுள்ள இரண்டு மான்கள் இழுத்துச் செல்வதைப் போல புனையப்பட்ட புராணக்கதையின் வடிவமே இது. இக்கடவுளுக்கு ‘யூல்’ என்ற பிறப்பின் பண்டிகை கொண்டாடப்படுவதும் கவனத்திற்குரியது. மான் கொம்புகளை வீட்டுச் சுவற்றில் மாட்டி வைக்கும் வழக்கம் ‘தோர்’ கடவுளின் நினைவாகவே எழுந்தது. நிலவை நோக்கி மான்கள் பறந்து செல்வது பாபிலோனியர்கள் வணங்கிய ‘நிம்ரோத்’ எனும் தெய்வமே.

நிம்ரோத் என்பது சூரியக் கடவுளே. அச்சூரியக் கடவுளின் பண்டிகை டிசம்பர் 25. இங்குதான், ‘யூத’ மற்றும் ஐரோப்பிய-அமெரிக்க வணிக அரசியல் நிலைநிறுத்தப்படுகிறது. கி.பி 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிரியார் நிக்கோலஸை 1800 களில் கவிதையாக எழுதவும், அதன் மூலம் கிறிஸ்மஸ் தாத்தா உருவாகவும் எது காரணம்?

1750-1850 என்ற இந்த நூறு ஆண்டுகளே ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவில் தொழிற் புரட்சி நடந்த காலம். தொழிற்புரட்சி புதிய உற்பத்தி கருவிகளை கண்டறிந்தது. தொழிற் புரட்சியின் தொடக்கம் பஞ்சாலைகள் சார்ந்ததே. துணிகளும் அதைச் சார்ந்த விழாக்களும், விழாக்களையொட்டிய பரிசுப் பொருட்களும் அன்றைய சந்தையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டன. அதன் விழா வடிவமே கிறிஸ்மஸ் தாத்தா உருவாக்கமும் அவர் பரிசு தருவார் என்ற கதையும்.

இன்று உலகில் 250 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். மேற்குலக முதலாளிகளுக்கு கிறிஸ்துவை விட கிறிஸ்மஸ் தாத்தாவே தேவை. ஏனெனில் அவரே உற்பத்தியான பொருளை சந்தைப்படுத்துகிறார். இதில் இன்னொரு அரசியல் முக்கியமானது. யூதத்திலிருந்து உருவான கிறிஸ்தவத்தை யூதத்திலேயே நிலை நிறுத்தும் வேலையும் உண்டு. யூத சூரியக் கடவுளின் பண்டிகை நாளான டிச 25 யே கிறிஸ்து பிறப்பாக கொண்டாட வைத்தனர். இதற்கு பயன்படுத்தப்பட்ட நிக்கோலஸ்,கவிதை எழுதிய டாக்டர் கிளமெண்ட் மூர் ஆகியோர் யூதர்களே.

நன்றி – சூர்யா சேவியர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *