Removal of flagpoles
மதுரை விலாங்குடி சித்தன் தொடுத்திருத்த வழக்கின் அடிப்படையில் மெட்ராஸ் மதுரை உயர்நீதிம்னற அமர்வு பொது இடங்களில் உள்ள அனைத்து கொடி கம்பங்களையும் அகற்ற அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளது.
நீதிபதி இளந்திரையன் இவ்வுத்தரவை பிரத்தார். அவர் தமிழ்நாடெங்கிலும் பொது இடங்களில் கட்சி, இயக்கங்கள், சாதி-மதம் தொடர்பான கொடிகள் இருப்பின் அவற்றை உடனே அகற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.
கொடிகம்பங்களால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறுகள், விபத்துகள் ஏற்படவும் காரணமாக உள்ளன.
எனவே நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்கள், பொது இடங்கள் என ஆங்காங்கே இருக்கும் கொடிகம்பங்களையும் 12 வாரங்களில் அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
