அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என கவர்னர் மாளிகையிலிருந்து வெளியேறிய ஆர்.என்.ரவி விளக்கம்
ஆண்டுதோறும் சட்ட சபையில் கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதற்காக இன்று சட்டசபையின் முதல் கூட்டத்திற்கு வந்த கவர்னரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டத்தை விட்டு உடனே கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளார். இதனால் அங்கு பரப்பு நிலவியுள்ளது.
