தவறான தகவலை எடிட் செய்து பரப்பியுள்ளனர்’: ஆண்ட பரம்பரை சர்ச்சை கருத்துக்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, “ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், ஆண்ட பரம்பரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி ‘யாரோ வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்பியுள்ளனர். நான் ஆண்ட பரம்பரை என்று கூறியது, ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து ஆண்ட பரம்பரை என்று தான் குறிப்பிட்டேன்.” என்று கூறியுள்ளார்.
