Muslims praise
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது.
இந்த விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகளின் பங்கேற்பு அதிகம் உள்ளதால் அவர்களுக்கான தொழுகை கூடம் (Prayer Hall) ஒன்றை அதிகாரப்பூர்வமாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ திறந்து வைத்தார்.
இந்தியாவின் பெரும்பாலான விமான நிலையங்களில் தொழுகை கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு வெளியே கலைச் சிற்பத்துடன் கட்டப்பட்டுள்ள கோயிலுக்கு உள்ளே ‘தொழுகை கூடம்’ திறக்கப்பட்டிருப்பதை வரவேற்று, திருச்சி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருச்சி மக்களின் ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் இக்கூடம் அமைந்திருப்பதாக பலரும் பாராட்டி தெரிவிக்கின்றனர்.
மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டி – விரைவில் ஓடுபாதை விரிவாக்கத்தையும் முடித்துத்தர உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
