குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கிற தொந்தரவு இருப்பவர்கள்
பெரியவர்கள் சிலருக்கும் மாதந்தோறும் ஜலதோசம் மாதிரியான தொந்தரவுகளுக்குள் சிக்கிக்கொள்ள கூடியவர்களாக இருப்பவர்கள்
வாரத்தில் இரண்டு நாட்கள் வெறும் சுக்கு, மிளகு இரண்டையும் எடுத்து வெந்நீடில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் போல எடுத்து அதில் வெல்லம் அல்லது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
அப்படி சாப்பிடும் பொழுது அவர்களுக்கு நெஞ்சில் கபம் சேரும் தன்மை குறையும். அதனால் அந்த தொந்தரவிலிருந்து படிப்படியாக அவர்கள் நிரந்தர தீர்வைக் காணலாம்.
-மருத்துவர் சிவராமன்.
