தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு.படிக்கராமு – பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன்; மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலன்; பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் பொன்.செல்வகணபதி; தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்; முத்தமிழ்க் காவலர் ஆ.பெ. விசுவநாதம் விருது – வே.மு.பொதியவெற்பன்; ஆகியோருக்கு வழங்கத் தேர்வு செய்துள்ளனர்.
விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியுடன் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவர்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது – விடுதலை ராஜேந்திரன்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது – து.ரவிக்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியுடன் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் படுவர்.
மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசிக்கு அளிக்கப்பெற உள்ளது. இவ்விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுடன் வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பெறும்.
இவ்விருதுகள் தமிழக முதல்வரால் திருவள்ளுவர் திருநாளான ஜன.15ம் தேதியன்று சென்னையில் வழங்கப்படவுள்ளன.
