சென்னைப் புத்தகக்காட்சியில் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிப்பட்டதாக சர்ச்சை
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48ஆவது சென்னைப் புத்தகக்காட்சியில் இன்று ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ நூல் வெளியீட்டு விழாவிற்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகைத் தந்திருந்தார். முதலில் பாட இருந்த‘நீராருங் கடலுடுத்த’ தமிழ்த் தாய் வாழ்த்து, தீடீரென்று பாரதிதாசனின் பாடலான ‘வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே’ என்பதாக மாற்றியதில் பரபரப்பு.
சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக, வேறு ஒரு பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
